சனி, 28 பிப்ரவரி, 2009

கல்லறை காயாது


சிரித்தபடியேதான் நீ
சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில்
சந்தேகமில்லை எமக்கு.
சமர்க்கள வீச்சாயினும்
சமாதானப் பேச்சாயினும்
இரண்டிலும்-
சலவை செய்த உன்
சிரிப்பைச் சந்திக்க
எதிரிகளே அஞ்சினார்கள்.
உன்-புன்னகையின் வெண்ணிறமே
புரட்சியின் விடிவெள்ளியாய்த்
தோன்றியது

கருத்துகள் இல்லை: