சனி, 28 பிப்ரவரி, 2009

கனவெல்லாமே.....


உன்னை நேசிக்கிறேன்
என்றதற்கு
நானும்.... உ...ங்...க...ளை
என்று நீ
இழுக்கும்போதே
வளைந்துவிட்டேன்
உன்பக்கம்....

அப்போது நினைத்தேன்
நீ
எனக்காக பிறந்தவள்
என்னைப் புரிந்தவளென்று
ஓர்நாள்
புரிந்த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......

மனம்
மாறக்கூடியது
காதல்
மாறாதது
எப்போதும்
மாறக்கூடிய மனதில்
ஒருபோதும்
மாறாக்காதல்
என்ன ஆச்சாயம்
மனதை
நிலைப்படுத்தும் காதல்
மங்கையவளை.......

காதலில்
முரண்பாடிருக்லாம்
எனக்கு
காதலியே
முரண்பாடாய்....

காதலில்
முரண்பாடுகளுக்குத்தான்
முக்கியத்துவம் போலும்....


கருத்துகள் இல்லை: