வருடப்பிறப்பு அன்று கோயிலில்
திருவிழாக் கால மக்கள் திரளுள்
கருவிழியாள் உன் பார்வையால்
அரும்பியது என்னுள் காதல்
தைப்பொங்கல் வரும்வரையில்
தையலுன் பின்னால் தினமும்
அலைந்த என் காதலுள்
தொலைத்தாய் உன் இதயத்தை
மாசி வந்ததும் நாமிருவரும்
பேசி பேசி காதல் செய்தோம்
பங்குனி மாதத்தில் உன்
சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்
சித்திரை மாதம் வந்ததும்
நித்திரையின்றி புரண்டேன்
வைகாசி பூத்ததும் நாமிருவரும்
கைராசி பார்த்து சந்தோசப்பட்டு
ஆனி வந்ததும் உல்லாசமாக
தேனீக்கள்போல பறந்து திரிந்து
ஆடி வந்ததும் இருவரும்
பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்
ஆவணி உதித்ததும் உனக்கு நான்
தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்
புரட்டாதியும் வந்தது நமக்குள்
புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்
ஐப்பசி வெகுவிரைவில் வந்தது
பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு
கார்த்திகை பூக்க தொடங்கையில்
பூர்த்தியானது நம் தொடர்பு
மார்கழி முடியும் வேளையில் எனக்கு
மூர்க்கம் வந்தது காதல் மேல்..
சந்தோசமாக மலர்ந்த காதல்
சந்தேகத்தால் உதிர்ந்தது.
மீண்டும் வருடம் பிறந்தது
கண்டேன் பல பெண்களை ஆனாலும்
வேண்டாம் எனக்குள்
இன்னொரு காதல்....
பார்வை
-
கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளி...
16 ஆண்டுகள் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக